அணைக்காட்டில் விளையாட்டு மைதானத்தின் கட்டுமான பணிகள் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அணைக்காடு பாலத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் விளையாட்டு மைதானத்தின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
By : King 24X7 News (B)
Update: 2024-06-22 11:34 GMT
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் 3-வது மண்டலத்திற்குட்பட்ட 34-வது வார்டு அணைக்காடு பாலத்தின் கீழ் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உருவாக உள்ள விளையாட்டு மைதானம் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் தலைமை பொறியாளர் திருமாவளவன், துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம், உதவி செயற் பொறியாளர் முனியாண்டி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார்,மதான் பவுண்டேஷன் நிறுவனர் உட்பட பலர் உள்ளனர்.