போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானம் வழங்க அறிவுறுத்தல்

கோடைகாலம் துவங்கியதை முன்னிட்டு போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானங்கள் வழங்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அறிவுறுத்தியுள்ளர்.

Update: 2024-03-02 12:35 GMT

போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானம் வழங்கல்

கோடை கால துவக்கத்தை முன்னிட்டு, திருப்பூர் குமரன் சாலையில், போக்குவரத்து போலீசார் மற்றும் ஹெல்மெட் அணிந்து வந்த பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில், குளிர்பானங்களை மாநகர காவல் துணை ஆணையர் வழங்கினார்.

கோடை கால தாக்கம் துவங்கியதை முன்னிட்டு, போக்குவரத்து காவலர்களுக்கு, குளிர்பானங்கள் வழங்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினபு அறிவுறுத்தியதன் அடிப்படையில், திருப்பூர் மாநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட  போக்குவரத்து காவல் நிலையங்களில் பணிபுரியும்  சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களுக்கு இன்று முதல் குளிர்பானங்கள் வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர், குமரன் சாலையில், போக்குவரத்து காவல் துணை ஆணையர் ராஜராஜன் போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்.

தொடர்ந்து அப்பகுதியில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கும் குளிர்பானங்களை வழங்கினார். இந்நிகழ்வில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News