வடகிழக்கு பருவமழை தீவிரம் - போளூர் மஞ்சள் ஆற்றில் வெள்ளம்

Update: 2023-11-08 09:37 GMT
போளூர் மஞ்சள் ஆற்றில் வெள்ளம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழகம் முழுவதும் வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து கடந்த ஒரு வாரமாக போளூர் பகுதியில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. அதேபோல் ஜவ்வாது மலையில் நேற்று பெய்த மழையில் போளூர் பெரிய ஏரிக்கு நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய மஞ்சள் ஆற்றில் வெள்ள நீர் ஜவ்வாதுமலை பட்டறைகாடு என்ற இடத்தில் உற்பத்தியாகி தானியார் அத்திமூர் வழியாக போளூர் பெரிய ஏரிக்கு வந்தடைகிறது.பட்டறைகாட்டில் நேற்று இரவு சுமார் 1 மணி நேரம் பெய்த மழையினால் 86 மி.மீ பதிவாகி உள்ளது. இதனால் போளூர் பெரிய ஏரிக்கு தொடர்ந்து மஞ்சள் ஆற்று வழியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.நீர்நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News