சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தீவிரம்

பள்ளிபாளையத்தில் சாக்கடை கால்வாய் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது

Update: 2023-12-15 13:14 GMT
சாக்கடை கால்வாய் பணி
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மழை காலங்களில் அதிக மழை பெய்யும் பொழுது, பள்ளிபாளையம் பேருந்து நிலையப் பகுதிகளில், அதிகளவு வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.

இதன் காரணமாக வர்த்தக வணிக கடை வியாபாரிகள் பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில், தற்போது கழிவுநீர் சாக்கடை கால்வாய் அகலப்படுத்தப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.. மழைக்காலங்களில் நீர் தேங்காத வகையில் கழிவுநீர் சாக்கடை கால்வாய் ஆழப்படுத்தப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.....

Tags:    

Similar News