திருவாரூர் பேருந்து நிலையத்தில் தீவிர சோதனை
By : King 24X7 News (B)
Update: 2023-10-29 13:01 GMT
மோப்ப நாய் சோதனை
கேரளா மாநிலத்தில் உள்ள தேவாலயத்தில் இன்று குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலியானார் பலர் காயமடைந்தனர் .இதனை தொடர்ந்து திருவாரூர் துணை காவல் கண்காணிப்பாளர் சிவராமன் தலைமையில் திருவாரூர் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடைவீதி உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதிகளில் போலீசார் மோப்பநாய் கொண்டு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின்போது நகர காவல் ஆய்வாளர் உள்ளிட்ட ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.