இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

கள்ளக்குறிச்சியில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-01 05:13 GMT

உண்ணாவிரத போராட்டம்

கள்ளக்குறிச்சி சி.இ.ஓ., அலுவலக வளாகத்தில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர்கள், சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு தமிழகம் முழுதும் போராடி வருகின்றனர். தி.மு.க., அரசு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என, அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கள்ளக்குறிச்சி சி.இ.ஓ., அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ச்சியாக மாவட்ட தலைவர் வேளாங்கண்ணி வில்லியம்ஸ், மாவட்ட பொருளாளர் அந்தோணி அமலச்சந்திரன் செயலாளர் பெலிக்ஸ் உதயராஜன் தலைமையில் நேற்று 150 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News