சிதம்பரத்தில் சர்வதேச சிறுதானிய உணவு திருவிழா

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நடைபெற்ற சர்வதேச சிறுதானிய உணவுத் திருவிழாவில் அமைச்சர் கலந்து கொண்டார்.

Update: 2024-01-29 00:55 GMT

உணவுத்திருவிழா

கடலூர் மாவட்டம், சிதம்பரம் தனியார் திருமண மண்டபத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நடைபெற்ற சர்வதேச சிறுதானிய உணவுத் திருவிழாவில் பல்வேறு துறைகளின் சார்பாக சிறுதானிய உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜராம், மாவட்ட வருவாய் அலுவலர் ம. இராஜசேகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் இரா. சரண்யா ஆகியோர் உள்ளனர்.
Tags:    

Similar News