சேலத்தில் மாணவனின் கையில் குத்திய இரும்பு கம்பி
சேலத்தில் மாணவனின் கையில் குத்திய இரும்பு கம்பி. அறுவை சிகிச்சை மூலம் அரசு டாக்டர்கள் அகற்றினர்.
Update: 2024-02-13 10:27 GMT
சேலம் செவ்வாய்பேட்டை பிள்ளையார் நகரை சேர்ந்தவர் ஜெகநாதன். அவரது மகன் நிரஞ்சன் (வயது 16). இவர் தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வீட்டின் சிலாப்பில் இருந்த ஷூவை எடுத்துவிட்டு கீழே குதித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த இரும்பு கம்பி மாணவனின் கையில் குத்தியது. சுமார் 5 சென்டி மீட்டர் வரை இரும்பு கம்பி மாணவனின் கையில் உள்ளே சென்றது. வலியால் துடித்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அங்கு அவருக்கு பொது அறுவை சிகிச்சை நிபுணர் சிவகுமார், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் தேன்மொழி ஆகியோர் தலைமையில் டாக்டர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதையடுத்து மாணவனின் கையில் குத்திய கம்பி அகற்றப்பட்டது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.