அயன்பாக்சால் விபத்து - பூந்தமல்லியில் வீடு தீக்கிரை

அயன்பாக்ஸ் சுவிட்ச் அணைக்காமல் சென்றதால் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்துள்ளது. போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-03-02 06:21 GMT

தீ விபத்து 

பூந்தமல்லி வைத்தீஸ்வரன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் முதல் தளத்தில் வசிப்பவர் ராமன், 32; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சுவாதி, 28; தனியார் மருத்துவமனை ஊழியர். இருவரும் நேற்று, வீட்டை பூட்டி, பணிக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில், மதியம் 1:00 மணிக்கு, இவரது வீட்டில் தீப் பிடித்து புகை கிளம்பியது. பக்கத்து வீட்டினர் பார்த்து, தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். எனினும், தீயில் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமாகின. பூந்தமல்லி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இஸ்திரி பெட்டியின் சுவிட்ச் அணைக்காமல் சென்றதால், மின்கசிவு ஏற்பட்டு, தீ விபத்து நடந்துள்ளது. போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News