பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணை வழங்குதல்
பண்ருட்டி அருகே பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணை வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-06 15:09 GMT
ஆணைகள் வழங்கல்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் காடாம்புலியூர் திட்டப் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரித்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி. வெ. கணேசன் திறந்து வைத்து பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையை வழங்கினார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண் தம்புராஜ், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராஜேந்திரன் எம்எல்ஏ மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.