பொதுமக்களுக்கு ஓட்டு போட வலியுறுத்தி நோட்டீஸ் வழங்கல்

தேசிய வாக்காளர் பேரவை சார்பாக நாச்சியார் கோயிலில் பொதுமக்களுக்கு ஓட்டு போட வலியுறுத்தி நோட்டீஸ் வழங்கப்பட்டது

Update: 2024-04-11 06:30 GMT

தேசிய வாக்காளர் பேரவை சார்பாக நாச்சியார் கோயிலில் பொதுமக்களுக்கு ஓட்டு போட வலியுறுத்தி நோட்டீஸ் வழங்கப்பட்டது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் தேசிய வாக்காளர் பேரவை சார்பாக இன்று நாச்சியார் கோவில் அனைத்து வார்டுகளிலும் துண்டு பிரசுரம் நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கி ஏப்ரல் 19 அன்று ஓட்டு போட வரிசையில் நிற்க தயங்காமல் அவசியம் ஓட்டு போட வேண்டும், நகைக் கடை முதல் பல இடங்களில் வரிசையில் நிற்கும் தயங்கவில்லை என்பதை உணர்த்துவோம் நோட்டாவிற்கு வாக்களிப்பது தவிர்க்க வேண்டும், பதிலாக தேசத்திற்கு யார் நல்லது செய்வார்கள் என்று  சிந்தித்து ஓட்டு போட வேண்டும்.

நமது வாக்கு குடும்ப அரசியல் செய்பவர்களுக்கா அல்லது தேசத்தை உலக அளவில் உயர்த்தி வருபவர்களுக்கா,  என்பது போன்ற அனைத்து விழிப்புணர்வு வார்த்தைகளை பதிவிட்டு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஓட்டு போடுவது என்பது நம் கடமை நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் சிந்திப்பதும் நம் கடமை என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தேசிய வாக்காளர் பேரவை சார்பாக அறிவுறுத்தப்பட்டது

Tags:    

Similar News