முடிவு செய்யவேண்டியவர் இபிஎஸ், அமித்ஷா அல்ல - கோகுல இந்திரா

அண்ணா திமுக அண்ணா பெயரை தாங்கி நிற்கின்ற கட்சி, உங்களுக்கு நாங்கள் அடிமை அல்ல.கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி என பிரித்துக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்வது இபிஎஸ் மட்டுமே அமித்ஷா இல்லை என முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்தார்.

Update: 2024-02-26 02:03 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.மறைந்த ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததாகவும், தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.அண்ணா திமுக அண்ணா பெயரை தாங்கி நிற்கின்ற கட்சி உங்களுக்கு நாங்கள் அடிமை அல்ல என பாஜகவை சாடினார்.கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி என பிரித்துக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்வது இபிஎஸ் மட்டுமே அமித்ஷா இல்லை என பேசினார் . நிகழ்ச்சியில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசந்திரன் நகரச் செயலாளர் மணிவண்ணன் மோகன் ஒன்றிய செயலாளர் வி பி சேகர் ரஞ்சித் குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News