ஒரே நேரத்தில் ஏழு வீடுகள் திடீரென தீ பற்றி எரிந்து பெரும் விபத்து....

விருதுநகரில் ஒரே நேரத்தில் ஏழு வீடுகள் திடீரென தீ பற்றி எரிந்து பெரும் விபத்து ஏற்ப்பட்டது.

Update: 2024-04-09 10:43 GMT

விபத்து

விருதுநகரில் ஒரே நேரத்தில் ஏழு வீடுகள் திடீரென தீ பற்றி எரிந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட அய்யனார் நகர் பகுதியைச் சேர்ந்த பில்டிங் காண்ட்ராக்டர் சண்முகையா (70) சொந்தமாக ஏழு தகர சீட் போட்ட குடிசை வீடுகள் உள்ளது. இந்த ஏழு வீட்டிலும் 7 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 10.30 மணி அளவில் வீடுகளில் திடீரென தீப்பிடித்து எறிந்தது கரும்புகை வெளியே வந்தது. உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அத்த தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரு விபத்து தவிர்க்கப்பட்டது. வீட்டில் இருந்த நபர்கள் வேலைக்கு சென்று விட்டதால் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென வீடுகள் தீப்பற்றி இருந்ததால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
Tags:    

Similar News