ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்திற்கான ஆயத்த மாநாடு பாளையங்கோட்டையில் நடந்தது.;
Update: 2024-02-11 08:33 GMT
ஆயத்த மாநாடு
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடந்தது. இதில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் விடுத்த கோரிக்கைகளை உறுதியளித்தபடி தமிழக முதல்வர் நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 12ம் தேதி போராட்டம் நடத்த உள்ளனர். இதனை முன்னிட்டு நேற்று ஆயத்த மாநாடு நடந்தது. இதில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.