கோபிசெட்டிபாளையத்தில் லஞ்சம் வாங்கிய மூவருக்கு சிறை தண்டனை

கோபிசெட்டிபாளையத்தில் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய மூவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியது.

Update: 2024-02-17 01:39 GMT

கோபிசெட்டிபாளையத்தில் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய மூவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியது.

கோபிசெட்டிபாளையத்தில் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு வழங்க ஆகஸ்ட் 2016.ல் ராமாயாள் என்பவரிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது, கோபி மின் வாரிய பொறியாளர் கேசவன், உதவி இயக்குனர் விஸ்வராஜ், போர்மேன் பழனிசாமி ஆகிய மூவரையும் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்து இன்று தீர்பளித்த ஈரோடு தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சரவணன், மூவருக்கும் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்..
Tags:    

Similar News