தொட்டப்ப நாயக்கனூரில் ஜல்லிக்கட்டு

உசிலம்பட்டி அருகே தொட்டப்ப நாயக்கனூரில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. 

Update: 2024-02-13 01:19 GMT

ஜல்லிக்கட்டு 

உசிலம்பட்டி அருகே தொட்டப்ப நாயக்கனூர் கிராமத்தில் ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேகம் திருவிழாவில்  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.  உசிலம்பட்டி அருகே தொட்டப்ப நாயக்கனூர் கிராமத்தில் ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேகம் திருவிழாவில்  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 681 மாடுகளும் 400 க்கு மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர் ஆர் டி ஓ ரவிச்சந்திரன் தாசில்தார் சுரேஷ் துவக்க வைத்தார்.

தொட்டப்ப நாயக்கனூர் ஜமீன்தார் கே.எஸ் பாண்டியார்   ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் இராஜசேகர்   சோலை ரவிக்குமார் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகமகாராஜா மற்றும் கோவிலில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம்  சுற்று பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து பல்வேறு மாவட்டங்களில். இருந்து  மாடுகளும்   ஐல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றனர் .  பரிசுகள்  சிறந்த மாடுக்கு டாடா ஏசி வேன்  மற்றும் மாடுபிடி வீரர்க்கு ஆட்டோ  டூவீலர்கள்  பரிசுகள் வழங்கப்பட்டனர். உசிலம்பட்டி எஸ் பி நல்லு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News