முல்லைப்பூ விலை வீழ்ச்சி - கிலோ ரூ.100க்கு விற்பனை

காஞ்சிபுரத்தில் முல்லைப்பூ, கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது

Update: 2024-05-01 02:24 GMT

முல்லைப்பூ

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள வெம்பாக்கம், பூஞ்சேரி, சேந்தமங்கலம், கண்டிகை, மேலச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் முல்லைப்பூ காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரம் முகூர்த்த நாட்களில், காஞ்சிபுரத்தில் கிலோ முல்லைப்பூ 300 - 400 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று அதிரடியாக விலை வீழ்ச்சியடைந்து, கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இதுகுறித்து காஞ்சிபுரம், பூக்கடை சத்திரத்தைச் சேர்ந்த பூ மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரி ஏ.கே.ஜி.பிரபாகரன் கூறியதாவது: முல்லைப்பூ விளைச்சல்அதிகரித்து காஞ்சிபுரத்திற்கு வரத்து அதிகரித்துள்ளது. இருப்பினும் தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு முகூர்த்த நாட்கள் இல்லாததாலும், காஞ்சிபுரத்தில் இரு நாட்களாக வெயில் கொளுத்தி வருவதாலும், பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்த்து விட்டனர். இதனால், பூக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது. இதனால், இன்று முல்லைப்பூ விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ, 300 ரூபாய்க்கு விற்பனை செய்த முல்லைப்பூவை தற்போது, 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News