மயிலாடுதுறையில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-26 01:52 GMT

பொதுகூட்டம்

மயிலாடுதுறை அருகே மணல்மேடு பேரூராட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏவும் மாவட்ட செயலாளருமான எஸ் பவுன்ராஜ் தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் மற்றும் அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் சங்கரதாஸ், சிவகாசி சின்னத்தம்பி, திருப்பூர் சாந்தி, மாநில எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் முனைவர் கோமல் அன்பரசன் சிறப்புரையாற்றினர்.

இதில் நலத்திட்ட உதவியாக அதிமுக கட்சியின் தீவிர தொண்டரும் விசுவாசியுமான ஐவநல்லூர் ஊராட்சி பனையூர் கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கு மாடு கன்று குட்டி மற்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரம் பேருக்கு அன்னகூடையுடன் மாங்கன்று வழங்கப்பட்டது. முன்’னதாக கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மாவட்ட செயலாளர் எஸ் பவுன்ராஜ் கூறுகையில்,

குடும்ப அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்களாட்சி தத்துவத்தை கொண்ட இயக்கம் அதிமுக. குடும்ப ஆட்சி வரக்கூடாது என்ற அண்ணாவின் கொள்கையை மூடி மறைத்து குடும்ப ஆட்சியை கொண்டு வந்தவர் கருணாநிதி. அண்ணாவின் கொள்கையை கடைபிடித்து அதிமுகவை துவங்கியவர் எம்ஜிஆர் அதை கடைசி வரை கடைபிடித்தவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா.

நல்லாட்சி நடத்தினால் மக்களே வந்து ஓட்டு போடுவார்கள், 2011 இல் வெற்றி பெற்ற அதிமுக அரசின் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நடத்திய நல்லாட்சியால் 2016 இல் மீண்டும் முதல்வராக வெற்றி பெற்றார். ஆனால் திமுக நல்லாட்சி நடத்தாமல் மயிலாடுதுறையில் குடுகுடுப்பை அடித்து நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது திமுகவுக்கு ஓட்டு போடுங்க என பிரச்சாரம் செய்கிறது என்றார்.

    

Tags:    

Similar News