பட்டணம் அதிமுக பேரூர் கழகத்தின் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

பட்டணம் அதிமுக பேரூர் கழகத்தின் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-02-24 14:19 GMT
புரட்சித்தலைவி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களின் 76 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர்.பட்டணம் பேரூர் கழகத்தின் சார்பாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதிமுக கொடி கம்பத்தில் கொடி ஏற்றி, புரட்சி தலைவி செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர். பின்னர் பொதுமக்கள் பஸ் பயணிகள் என அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பட்டணம் பேரூர் கழகச் செயலாளர் கே. பாலசுப்ரமணியம் கலந்துகொண்டு தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் எஸ்.பழனிவேல் பேரூர் கழகத் துணைச் செயலாளர் ATC சரவணன், மாவட்ட பிரதிநிதி வி. கண்ணன், மாவட்ட பிரதிநிதி ஆர். பழனிவேல், பேரூர் கழகப் பொருளாளர், குமார், சசிகலா, பேரூர் கழகத் துணைச் செயலாளர். மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News