இதயத்தில் ஏற்பட்ட வலியால் உயிரிழந்த ஜேசிபி ஆபரேட்டர் !

இதயத்தில் ஏற்பட்ட வலியால் உயிரிழந்த ஜேசிபி ஆபரேட்டர் காவல்துறை வழக்கு பதிவு.

Update: 2024-04-09 12:10 GMT

வழக்கு பதிவு 

இதயத்தில் ஏற்பட்ட வலியால் உயிரிழந்த ஜேசிபி ஆபரேட்டர். காவல்துறை வழக்கு பதிவு. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை, புதுப்பட்டிணம், பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் மீரா மைதீன் மகன் ரஹ்மத்துல்லாஹ் முகமது வயது 55. இவர், கரூர் மாவட்டம், க. பரமத்தி காவல் எல்லைக்குட்பட்ட, அருங்கரை அம்மன் கிரசர் நிறுவனத்தில் ஜேசிபி ஆபரேட்டராக அங்கேயே தங்கி பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் ஏப்ரல் 8-ம் தேதி காலை 9 மணி அளவில், அவரது அறையில் உள்ள கழிவறையில் பிணமாக கிடந்துள்ளார் ரஹ்மத்துல்லா முகமது. உடன் பணியாற்றும் நபர்கள் இதனைப் பார்த்து, உடனடியாக ரகுமத்துல்லா முகமது வின் மகன் வாசித் வயது 23 என்பவருக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்து, தனது தந்தை உயிரிழந்ததை கண்டு கலங்கினார்.

பின்னர் அது குறித்து சோதனை மேற்கொண்ட போது அவருக்கு ஏற்கனவே இருதய வலி ஏற்பட்டு, அதன் காரணமாக அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.

இதனால், இது குறித்து பாசித் காவல்துறையினருக்கு அளித்த புகார் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த ரஹ்மத்துல்லாஹ் முஹம்மது உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News