தாதகாப்பட்டியில் தொழிலாளி வீட்டில் நகை திருட்டு
சேலம் தாதகாப்பட்டியில் தொழிலாளி வீட்டில் 4 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-07 15:00 GMT
கோப்பு படம்
சேலம் தாதகாப்பட்டி அம்மாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த், கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி மணிமேகலை (வயது 31). நேற்று முன்தினம் இரவு இவர்கள் வீட்டை பூட்டி விட்டு, அருகில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்றனர்.
மறுநாள் அவர்கள் வீட்டுக்குவந்த போது, கதவு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.