சாலை விபத்தில் நகைக்கடை உரிமையாளர் பலி - போலீசார் விசாரணை

திருப்புவனம் அருகே சாலை விபத்தில் நகைக்கடை உரிமையாளர் பலியான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2024-06-20 05:02 GMT

காவல்துறை விசாரணை


மதுரை இஸ்மாயில்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (55). திருப்புவனத்தில் நகை கடை வைத்துள்ளார். திருப்புவனத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பலரும் தங்க நகை வாங்கி விட்டு வாரந்தோறும் பணம் வழங்குவது வழக்கம். பணம் வசூல் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் திருமாஞ்சோலை சென்றுஉள்ளார். குயவன்குளம் விலக்கில் சாலையின் குறுக்கே மாடு சென்ற போது தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். ஹெல்மெட் அணிந்திருந்தும் கீழே விழுந்த போது ஹெல்மெட் கழன்று ஓடியதால் தலையில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News