என் சின்னம்(மைக்) முன்பு நின்று தான் ஓட்டு கேட்க வேண்டும்: சீமான்

இந்தியா முழுக்க எவர் ஒட்டு கேட்டடாலும் என் சின்னம்(மைக்) முன்பு நின்று தான் ஓட்டு கேட்க வேண்டும் அருப்புக்கோட்டை தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சீமான் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-30 08:45 GMT

வாக்கு சேகரித்த சீமான்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கெளசிக் ஆதரவாக தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்பரையாற்றி வேட்பாளர் கௌசிக் ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், நீட் என்பதை வேறு எங்கேயாவது போய் நீட்டு என துணிவோடு சொல்ல இங்கு ஒரு ஆண்மகன் இல்லை. இங்கு எல்லோருடைய கைகளும் கரை படிந்த கைகள் வருமான வரித்துறை அமலாக்கத்துறை ரெய்டுக்கு பயந்து அனைவரும் கைகட்டி நிற்கிறார்கள்.

ஈ.டி ரெய்டு, இன்கம்டாக்ஸ் ரெய்டு, என்ஐஏ ரெய்டு என எதற்கு அஞ்சாமல் நாங்கள் தனியாக நிற்கிறோம். எங்கும் கருணாநிதி எதிலும் கருணாநிதி என நிறுவியது தான் இந்த மூன்றாண்டு திராவிட ஆட்சியின் சாதனை. டாஸ்மாக் மட்டும் தான் கலைஞர் பெயர் வைக்க வேண்டும்.

கருணாநிதி படிப்பகம் என்பதற்கு பதிலாக கருணாநிதி குடிப்பகம் என்று வைத்திருந்தால் மிகச் சரியானதாக இருந்திருக்கும். திராவிட கட்சிகளை வீழ்த்த யாரும் பிறக்கவில்லை என கூறுகிறார்கள் பிறக்கவில்லை என்றால் எதற்கு பயப்படுகிறீர்கள்.

பிஜேபி இந்தியாவையே பத்தாண்டுகள் ஆண்ட கட்சி 22 மாநிலங்களில் ஆட்சி செய்யும் கட்சி பெரிய கட்சி குச்சி ஒரு சின்னப் பையன் சீமானை பார்த்து அவன் சின்னத்தில் எதற்கு ஆட்டம் காட்டுகிறாய். கூட்டத்தில் யாராவது ஒருவர் உன்னை எதிர்த்தால் நீ வளர்ந்து கொண்டிருக்கிறாய் எனப் பொருள் ஒரு கூட்டமே உன்னை எதிர்த்தால் நீ மறந்து விட்டாய் எனப் பொருள்.

நாங்கள் வளர்ந்து விட்டோம் அதனால் நடுங்குகிறாய் அந்த பயம் எல்லாருக்கும் இருக்க வேண்டும் சின்னத்தை எடுத்து விட்டதாக நினைப்பார்கள். ஆனால் இன்று என் சின்னத்தில் தான் நீ ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கிறாய். ஒரு வெறுப்பில் செருப்பு சின்னத்தை தான் கேட்கலாம் என இருந்தேன். அரவிந்த் கெஜ்ரிவால் மேலே விளக்குமாறு சின்னத்தை கூட்டிக்கொண்டே வரட்டும் நாம் கீழே செருப்பை வைத்து அடித்து கொண்டே செல்வோம். கச்சத்தீவை மீட்பது எப்படி என்பது எங்களுக்கு தெரியும் நெய்தல் படையை உருவாக்குவேன் அதில் மீனவனுக்கு மட்டுமே வாய்ப்பு.

மீனவன் பெட்ரோலை கொண்டு போகிறானோ இல்லையோ கையில் கையறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்களை கொடுத்து விடுவேன். அதை கையில் வைத்துக் கொள் உன்னை தொட்டல் தூக்கு இன்டர்நேஷனல் இஸ்யூ ஆக்கு மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்.

கேரளாவில் இருந்து எல்லை தாண்டி செல்லும் மீனவர்களை யாரும் பிடிப்பதில்லை அதை ஏன் என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வரும் அது ஏனென்றால் அவர்கள் உண்மையில் நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவர்கள். கேரளாவில் அவர்களது மண்ணையும் மலையையும் உயிராக மதிக்கிறார்கள். தமிழகத்தில் இருந்து தான் மணலை கடத்திக் கொண்டு கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று விற்கிறார்கள் இங்கிருந்த 32 ஆறுகளும் செத்தது. ஓட்டு கேட்க போகும் இடத்தில் இலவசம் தருபவன் உன்னை ஏமாற்றுபவன் தான் தருவான். அறிவை வளர்க்கும் கல்வியையும் உயிரைக் காக்கும்

மருத்துவத்தையும் உலக தரத்தில் நான் தருவேன். இந்த நாட்டை ஆள்வதற்கு ஒருவர் கூடவா இல்லை இதற்கு மோடி வரவேண்டுமா ராகுல் வர வேண்டுமா என பேசிக் கொண்டிருந்தபோதே திடீரென ஹிந்தியில் பேசிய சீமான் காவிரியில் தண்ணீர் வாங்கி தர துப்பில்லாத உனக்கு எதற்கு தமிழரின் ஓட்டு. இவ்வளவுதான் ஒரு மனிதனால் கத்த முடியும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு கூட்டம் பேசலாம் என நினைக்கிறீர்கள். இது தன்னலம் என்று நினைத்தால் நான் ஏன் கூட்டணி வைத்திருக்கக் கூடாது. கூட்டணி வைத்தவர்களுக்கு எல்லாம் சின்னம் கிடைக்கிறதே ஜிகே வாசனுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்கிறது, ஐயா டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்கிறது எங்களுக்கு மட்டும் ஏன் மக்கர் கிடைக்கிறது எந்த சின்னம் கேட்டாலும் கிடைக்கவில்லை.

இந்தியா முழுக்க எவர் ஒட்டு கேட்டடாலும் என் சின்னம் முன்பு நின்று தான் ஓட்டு கேட்க வேண்டும். எங்களுக்கு மைக் சின்னத்தில் வாக்கு செலுத்துங்கள் என பேசி மைக் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.ன்ற தொகுதி வேட்பாளர் கெளசிக் ஆதரவாக தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்பரையாற்றி வேட்பாளர் கௌசிக் ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், நீட் என்பதை வேறு எங்கேயாவது போய் நீட்டு என துணிவோடு சொல்ல இங்கு ஒரு ஆண்மகன் இல்லை. இங்கு எல்லோருடைய கைகளும் கரை படிந்த கைகள் வருமான வரித்துறை அமலாக்கத்துறை ரெய்டுக்கு பயந்து அனைவரும் கைகட்டி நிற்கிறார்கள்.

ஈ.டி ரெய்டு, இன்கம்டாக்ஸ் ரெய்டு, என்ஐஏ ரெய்டு என எதற்கு அஞ்சாமல் நாங்கள் தனியாக நிற்கிறோம். எங்கும் கருணாநிதி எதிலும் கருணாநிதி என நிறுவியது தான் இந்த மூன்றாண்டு திராவிட ஆட்சியின் சாதனை. டாஸ்மாக் மட்டும் தான் கலைஞர் பெயர் வைக்க வேண்டும். கருணாநிதி படிப்பகம் என்பதற்கு பதிலாக கருணாநிதி குடிப்பகம் என்று வைத்திருந்தால் மிகச் சரியானதாக இருந்திருக்கும். திராவிட கட்சிகளை வீழ்த்த யாரும் பிறக்கவில்லை என கூறுகிறார்கள் பிறக்கவில்லை என்றால் எதற்கு பயப்படுகிறீர்கள்.

பிஜேபி இந்தியாவையே பத்தாண்டுகள் ஆண்ட கட்சி 22 மாநிலங்களில் ஆட்சி செய்யும் கட்சி பெரிய கட்சி குச்சி ஒரு சின்னப் பையன் சீமானை பார்த்து அவன் சின்னத்தில் எதற்கு ஆட்டம் காட்டுகிறாய். கூட்டத்தில் யாராவது ஒருவர் உன்னை எதிர்த்தால் நீ வளர்ந்து கொண்டிருக்கிறாய் எனப் பொருள் ஒரு கூட்டமே உன்னை எதிர்த்தால் நீ மறந்து விட்டாய் எனப் பொருள்.

நாங்கள் வளர்ந்து விட்டோம் அதனால் நடுங்குகிறாய் அந்த பயம் எல்லாருக்கும் இருக்க வேண்டும் சின்னத்தை எடுத்து விட்டதாக நினைப்பார்கள். ஆனால் இன்று என் சின்னத்தில் தான் நீ ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கிறாய். ஒரு வெறுப்பில் செருப்பு சின்னத்தை தான் கேட்கலாம் என இருந்தேன். அரவிந்த் கெஜ்ரிவால் மேலே விளக்குமாறு சின்னத்தை கூட்டிக்கொண்டே வரட்டும் நாம் கீழே செருப்பை வைத்து அடித்து கொண்டே செல்வோம். கச்சத்தீவை மீட்பது எப்படி என்பது எங்களுக்கு தெரியும் நெய்தல் படையை உருவாக்குவேன் அதில் மீனவனுக்கு மட்டுமே வாய்ப்பு. மீனவன் பெட்ரோலை கொண்டு போகிறானோ இல்லையோ கையில் கையறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்களை கொடுத்து விடுவேன். அதை கையில் வைத்துக் கொள் உன்னை தொட்டல் தூக்கு இன்டர்நேஷனல் இஸ்யூ ஆக்கு மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்.

கேரளாவில் இருந்து எல்லை தாண்டி செல்லும் மீனவர்களை யாரும் பிடிப்பதில்லை அதை ஏன் என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வரும் அது ஏனென்றால் அவர்கள் உண்மையில் நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவர்கள். கேரளாவில் அவர்களது மண்ணையும் மலையையும் உயிராக மதிக்கிறார்கள். தமிழகத்தில் இருந்து தான் மணலை கடத்திக் கொண்டு கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று விற்கிறார்கள் இங்கிருந்த 32 ஆறுகளும் செத்தது. ஓட்டு கேட்க போகும் இடத்தில் இலவசம் தருபவன் உன்னை ஏமாற்றுபவன் தான் தருவான்.

அறிவை வளர்க்கும் கல்வியையும் உயிரைக் காக்கும் மருத்துவத்தையும் உலக தரத்தில் நான் தருவேன். இந்த நாட்டை ஆள்வதற்கு ஒருவர் கூடவா இல்லை இதற்கு மோடி வரவேண்டுமா ராகுல் வர வேண்டுமா என பேசிக் கொண்டிருந்தபோதே திடீரென ஹிந்தியில் பேசிய சீமான் காவிரியில் தண்ணீர் வாங்கி தர துப்பில்லாத உனக்கு எதற்கு தமிழரின் ஓட்டு.

இவ்வளவுதான் ஒரு மனிதனால் கத்த முடியும். ஒரு நாளைக்கு எவ்வளவு கூட்டம் பேசலாம் என நினைக்கிறீர்கள். இது தன்னலம் என்று நினைத்தால் நான் ஏன் கூட்டணி வைத்திருக்கக் கூடாது. கூட்டணி வைத்தவர்களுக்கு எல்லாம் சின்னம் கிடைக்கிறதே ஜிகே வாசனுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்கிறது, ஐயா டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்கிறது எங்களுக்கு மட்டும் ஏன் மக்கர் கிடைக்கிறது எந்த சின்னம் கேட்டாலும் கிடைக்கவில்லை.

இந்தியா முழுக்க எவர் ஒட்டு கேட்டடாலும் என் சின்னம் முன்பு நின்று தான் ஓட்டு கேட்க வேண்டும். எங்களுக்கு மைக் சின்னத்தில் வாக்கு செலுத்துங்கள் என பேசி மைக் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

Tags:    

Similar News