பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி:தமிழக அரசுக்கு நெல்லை முபாரக் வேண்டுகோள்
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நெல்லை முபாரக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
By : King 24X7 News (B)
Update: 2024-01-21 11:28 GMT
பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் மீது பட்டியலின சிறுமிக்கு கொடுமைகள் செய்ததாக கூறி பல்வேறு புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும், நிவாரணம் தாமதம் இன்றி கிடைத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.