காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா

காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது

Update: 2023-11-26 17:36 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே குறிச்சியார்பட்டியில் அமைந்துள்ள தெற்கு காளியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சனிக்கிழமை முதலே யாகசாலை பூஜைகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்றன. இன்று குடமுழுக்கை முன்னிட்டு அதி காலை கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வேத விற்பன்னர்கள் கோபுர கலசத்தின் மேல் கலச நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் நடைபெற்று விசேஷ தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை குறிச்சியார்பட்டி மாரியப்பன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News