கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்புகள் :அதிமுக ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் ஸ்டேட் வங்கி அருகே கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து அப்பாவி மக்கள் உயிரிழந்ததை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2024-06-25 05:29 GMT
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து அப்பாவி மக்கள் உயிரிழந்ததை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரப் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அருகே அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பத்தூர் அதிமுக நகர செயலாளர் டி.டி. குமார் தலைமை வகித்தார். வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி. சம்பத் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ். டி.டி சங்கர் மாவட்ட இளம் பாசறை டாக்டர் திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக கழக செயலாளருமான கே .சி. வீரமணி கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார் ‌. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கட்சியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News