கரிக்குப்பம்: சமுதாய கூடத்தை எம்எல்ஏ திறந்து வைப்பு !

சமுதாய கூடம் கட்டிடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

Update: 2024-03-14 06:55 GMT

எம்எல்ஏ 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கொத்தட்டை ஊராட்சி கரிக்குப்பம் கிராமத்தில் தமிழ்நாடு பவர் கம்பெனி IL&FS நிறுவனம் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய கூடம் கட்டிடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News