காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு
பெரம்பலூர் ஹோப் திறன் மேம்பாட்டு மைய மாணவ மாணவிகளிடையே பெண்கள்,குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் காவலன் செயலி குறித்து பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.;
விழிப்புணர்வு கூட்டம்
ரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து மற்றும் ஒன் ஸ்டாப் சென்டர் மேகலா ஆகியோர்கள் இணைந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஹோப் திறன் மேம்பாட்டு மையத்தில் பயிலும் மாணவ மாணவிகளிடையே பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மே.29 -ம் தேதி மாலை விழிப்புணர்வு நடத்தினார்கள்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளிடம் பேசிய சிறப்பு உதவி ஆய்வாளர், குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண்கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்தும் காவல்துறையில் செயல்பட்டு வரும் காவலன் செயலி குறித்தும் விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் உதவி எண்களான பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 மற்றும் 112, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098, பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 மேலும் சைபர் கிரைம் உதவி எண்கள் 1930 குளித்தும், ஒவ்வொரு மாணவிகளும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தங்களது பெற்றோர்களிடம் அச்சமின்றி தெரிவித்து அதற்கான தீர்வினைப் பெற வேண்டும் என்றும் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தொடுதல் குறித்தகுட் டச் பேட் டச் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.