கேரளா லாட்டரி விற்பனை செய்தவர் கைது!

கொல்லங்கோடு அருகே தடைசெய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-07-03 04:32 GMT

 கைது

குளச்சல் சப் டிவிஷன் தனிப்பிரிவு ஏட்டு ஸ்ரீகுமார், நேற்று மதியம் கொல்லங்கோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள சோதனை சாவடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சூழால் பகுதியில் ஒருவர் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடு பட்டிருந்தார். அதை பார்த்த தனிப்பிரிவு ஏட்டு அவரை மடக்கி பிடித்து கொல்லங் கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

தொடர்ந்து கொல்லங்கோடு போலீசார் விசாரணை நடத்தியதில், லாட்டரி விற்பனையில் ஈடு பட்ட நபர் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை அருகே மரியாபுரம் மேலமாகம் பகுதியை சார்ந்த சிவகவி (58) என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்த 36 தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் ₹3700 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக கொல்லங்கோடு எஸ்.ஐ. ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் சிவகவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News