சேலத்தில் வேலைக்கு சென்ற அக்கா, தம்பி கடத்தலா? - போலீசார் விசாரணை

சேலம் பள்ளப்பட்டியில் வேலைக்கு சென்ற மகள் மற்றும் மகன் காணாமல் போனது குறித்து தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-04-12 07:44 GMT

காவல் நிலையம் 

சேலம் பள்ளப்பட்டி ஜவகர்மில் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருக்கு பாரதி (வயது 20) என்ற மகளும், யோகேஸ்வரன் (18) என்ற மகனும் உள்ளனர். அவர்கள் இருவரும் சின்னேரிவயக்காடு பகுதிக்கு கூலி வேலைக்கு சென்று வந்தனர். நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்ற அவர்கள் மாலையில் வீடு திரும்பவில்லை. அவர்களை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் மகள், மகன் மாயமானது குறித்து அவர்களது தாய் ஷாலினி பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்காள், தம்பி இருவரும் கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News