16 வயது இளம் பெண்ணை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது !

தேன்கனிக்கோட்டை அருகே 16 வயது கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-03-08 09:17 GMT

கைது

தேன்கனிக்கோட்டை அருகே 16 வயது கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது. தருமபுரி மாவட்டம் வெள்ளி சந்தை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் காணாமல் போன 16 வயது மகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள போடிசிப்பள்ளி கிராமத்தில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 ஆம் தேதி மாலை கல்லூரி முடிந்து மாலை நீண்ட நேரமாகியும் மாணவி வீடு திரும்பவில்லை. மேலும் அவரது செல் போன் சுவிட் ஆப் செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ளது. அவரை பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்காதால் மகளை கண்டு பிடித்து தருமாறு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனைவியின் பெற்றோர் புகார் செய்துள்ளனர். இதுகுறித்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். போலீசாரின் விசாரணையில் வெள்ளி சந்தை காமராஜ் நகரை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் கிணறு வெட்டும் தொழிலாளி தினேஷ்குமார் (22) என்பவர் கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். சம்பவத்தன்று மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றது தெரிய வந்தது. 16 வயது மாணவியை கடத்திய குற்றத்திற்காக தினேஷ்குமார் மீது போக்சோ வழக்கு மற்றும் கடத்தல் வழக்கு புதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News