ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் கொமதேக வேட்பாளர்!

நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சூரியமூர்த்தி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Update: 2024-03-19 14:07 GMT

நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சூரியமூர்த்தி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


நாமக்கல் பாராளுமன்ற மக்களவை தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக எஸ்.சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தோ்தல் வரும் ஏப்ரல் 19 ந் தேதி நடைபெற உள்ளது. தோ்தலில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக அணி அமைத்து தோ்தலுக்கு தயாராகி வருகின்றனா். இதில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் பாராளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நாமக்கல் பாராளுமன்ற மக்களவை தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக எஸ்.சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவா் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதை அடுத்து சென்னை திமுக தலைமை அலுவலகம் அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாமக்கல் பாராளுமன்ற மக்களவை தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் எஸ்.சூரியமூர்த்தி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராஜா, முன்னாள் அமைச்சர் பொன்முடி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆா்.ஈஸ்வரன், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வகணபதி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News