வெள்ளக்காடாக மாறிய கொளப்பாக்கம் பூங்கா

கொளப்பாக்கம் ஊராட்சியில் உள்ள பூங்காவில் மழைநீர் சூழ்ந்து உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2024-06-29 15:28 GMT

வெள்ளம் சூழ்ந்துள்ள பூங்கா

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியம், கொளப்பாக்கம் ஊராட்சி, ராமமூர்த்தி அவென்யூவில் பூங்கா உள்ளது. காலை, மாலை வேளைகளில் நடைபயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சிக்காக, ஏராளமானோர் பூங்காவை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பூங்கா அமைந்துள்ள சுற்றுப்புற பகுதியில் மழைநீர் வடிகால்வாய்கள் முறையாக இல்லை. சிறு மழை பெய்தாலே, இங்கு தண்ணீர் தேங்கி நிற்பது தொடர்கதையாக உள்ளது. 

 இதனால், பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. பாம்பு, நத்தை உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் படையெடுப்பும் அதிகரித்துள்ளது.

இதனால், பூங்காவுக்குள் செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர். பூங்காவில் மழைநீர் வடியும் வகையில் கால்வாய் அமைக்க வேண்டும் என, அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News