வங்கிக்கு பணம் எடுக்க சென்ற மூதாட்டி ரயில் மோதி உயிரிழப்பு

OAP பணம் எடுக்க வங்கிக்கு சென்ற மூதாட்டி ரயிலில் மோதி உடல் சிதைந்து உயிரிழப்பு.

Update: 2024-03-13 18:55 GMT

ரயில் விபத்தில் இறந்த மூதாட்டி

கிருஷ்ணகிரி அருகே முதியோர்  பணம் எடுக்க வங்கிக்கு சென்ற மூதாட்டி ரயிலில் மோதி உடல் சிதைந்து உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லாவி ரயில் நிலையம் பகுதியில் இருப்புப் பாதையை கடந்து IOB பேங்க் பகுதியில் ஓஏபி பணத்தை எடுக்க சென்றார். அப்பொழுது ரயில் வந்ததை அறியாத மூதாட்டி மீது ரயில் மோதி உடல் சிதைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

ரயிலில் அடிபட்ட மூதாட்டி வைத்திருந்த பையில் அவரது வங்கி புத்தகம், ஆதார் அட்டை இருந்துள்ளது. அதில் இறந்த மூதாட்டி ஆனந்தூர் அருகே உள்ள ரெட்டிபட்டி கிராமப் பகுதியைச் சேர்ந்த மூக்கியம்மாள் என்பது உறுதி செய்யப்பட்டது. சம்பவ இடத்தில் இருப்புப் பாதை போலீசார் நேரில் வந்து சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News