கந்தசாமி கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை

கந்தசாமி கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-07-04 09:09 GMT

கோவில் திருவிழா

திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆனி மாத கிருத்திகை விழா, நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. கந்த பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமையில் கிருத்திகை வந்ததால், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானபக்தர்கள் பங்கேற்று, முடி காணிக்கை செலுத்தி, சரவணப் பொய்கையில் நீராடி, அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

மாலையில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் கந்தசுவாமிபெருமான், மாட வீதிகளில் வீதியுலா வந்து, பக்தர் களுக்கு அருள்பாலித்தார். திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை, மாட வீதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட போலீசார், போக்குவரத்து சரிசெய்தல் மற்றும் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டனர்.

Tags:    

Similar News