கழிவுநீர் பள்ளத்தை சுத்தப்படுத்திய ஊராட்சி

குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் பள்ளத்தை  தூய்மை செய்தனர்.

Update: 2024-05-22 12:47 GMT

தட்டான் குட்டை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட ஜெய்ஹிந்த் நகர் பகுதியில் வடிகால் பணிகள் நடந்து வரும் நிலையில்,  சில வீதிகளில் முழுமை பெறாமல் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் தங்கள் வீட்டு கழிவுநீரை அங்குள்ள பள்ளத்தில் விட்டு வருகின்றனர்.

இந்த பள்ளத்தில் உள்ள பாதை மேடு, பள்ளமாக இருப்பதால், இதில் விடப்படும் கழிவுநீர் தேங்கி விடுகிறது. தற்போது மழையும் தினமும் பெய்து வருவதால், இந்த நீரின் தேக்கம் அதிகரித்து துர்நாற்றம் ஏற்பட்டு வந்தது.  இதனால் கொசு உற்பத்தியாகும்  நிலை உள்ளதால், அதனை தவிர்க்கும் வகையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில், பொக்லின் மூலம் இந்த பள்ளம் தூய்மைப்  படுத்தப்பட்டது.  இதனால் கொசு உற்பத்தி தடுக்கப்பட்டதுடன், துர்நாற்றத்திளிருந்து பொதுமக்கள் விடுபட்டு மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News