மாநில அளவில் இரண்டாவது இடம் பிடித்த குமரி மாணவி

குலசேகரத்தில் தனியார் பள்ளி மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் இரண்டாவது இடமும் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளார்.

Update: 2024-05-10 11:40 GMT

இரண்டாம் இடம் பிடித்த மாணவி

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 96.24% தேர்ச்சி விகிதம் பதிவாகி மாநில அளவில் 4வது இடம் பிடித்துள்ளது.

இதில் மாணவர்கள் 94.28% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 98.14% தேர்ச்சி அடைந்துள்ளனர்.

குமரி மாவட்டம் குலசேகரம் எஸ்.ஆர்.கே.வி மேல்நிலைப் பள்ளியில் படித்த காவஸ்தலம் பகுதியை சேர்ந்த மாணவி தீபிகா இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500/ 498 மதிப்பெண் பெற்றுள்ளார். மாநில அளவில் இரண்டாவது இடமும் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்

Tags:    

Similar News