குமரியில் பிற்பகல் 3 மணி வரை 48. 32 சதவீத வாக்குகள் பதிவு

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பிற்பகல் 3 மணி வரை 48. 32 சதவீத வாக்குகள் பதிவானது.

Update: 2024-04-19 10:28 GMT
பைல் படம்


கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்குட்பட்ட கிள்ளியூர், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு , நாகர்கோவில் , கன்னியாகுமரி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் இன்று மொத்தம் 1698 வாக்குசாவடிகளில் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. குமரியின் மொத்த வாக்காளர்கள் மொத்தம்  15.57 லட்சம் பேர் ஆவார்கள்.       

இந்த நிலையில் தேர்தல் நாளான இன்று காலை 7 மணி முதல் வாக்கு பதிவு தொங்கியது. பிற்பகல் 3 மணி வரை   48.32  சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.  இந்த வகையில் 3 மணி நிலவரப்படி விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில்  107854 வாக்குகள் 45.36% ; கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி 149509 வாக்குகள் 50.52% ;  

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி 114145 வாக்குகள் 46.24%;  நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி 125818 வாக்குகள் 47.31%;   பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி 126576 வாக்குகள் 52.33% ;  குளச்சல் சட்டமன்ற தொகுதி 128829 வாக்குகள் 47.78%  பதிவாகியுள்ளதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News