குமரி : சமூக வலைத்தளங்களில் பூசாரியின் ஆபாச வீடியோ வைரல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக வலைத்தளங்களில் பூசாரி ஒருவரின் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-05-17 02:48 GMT
பைல் படம்

நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்த சுமார் 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் கோவிலில் பூஜைகளுக்கு உதவியாக சென்று வருகிறார். சில நேரங்களில் பிரதான பூசாரி விடுமுறை எடுக்கும் போது அவர்களுக்கு பதிலாக இந்த வாலிபர் பூஜைகள் செய்வது வழக்கம். அப்போது சில பெண்களுடன் இவர் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம்  இரவு இளம் வயது பூசாரி காலியாக உள்ள அலுவலக அறையில் தனது செல்போன் கேமராவை ஆன் செய்கிறார்.பின்னர் தனது சட்டை வேட்டி மற்றும் உள்ளாடை கலைந்து விட்டு, சுய இன்ப  ஆபாச செய்கைகளில் ஈடுபடுகிறார். அதன் பின்னர் அவர் கேமராவை ஆப் செய்கிறார். சுமார் 6நிமிடங்கள் ஓடுகின்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.       இது பற்றி தற்போது விமர்சனம் எழுந்துள்ளது. இந்த வீடியோவை எதற்காக இளம் பூசாரி எடுத்தார்? தன்னுடன் பழகிய பெண்களுக்கு அனுப்பினாரா அல்லது அவர்களை மயக்க இவ்வாறு எடுத்தாரா? அல்லது தன் பாலின நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்தாரா?  அது எப்படி சமூக வலைத்தளங்களில் வெளியானது?  பரப்புவது யார்?  என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News