பரம்பக்குடியில் கும்பாபிஷேக விழா

பரம்பக்குடியில் கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-05-26 10:39 GMT

கும்பாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே பரம்பக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பெரிய கருப்பர் சோனையா சுவாமி ஆலயத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா முதல் கால யாக பூஜையுடன், கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் மகாலட்சுமி, கோ பூஜையுடன் தொடங்கி யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீருக்கு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை சுற்றி வலம் வந்து கோவில் உச்சிக்கு சென்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கருட பகவான் வலம் வந்த நேரத்தில் இன்று காலை 10.30 மணியளவில் புனித நீரை கோவிலில் உள்ள கும்ப கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேக நடத்தினர். இவ்விழாவினை பரம்பக்குடி கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News