விஸ்வேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்

ஆவத்திபாளையத்தில் ஆற்றின் நடுவே வீற்றிருக்கும் விஸ்வேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.

Update: 2024-01-18 11:18 GMT

காவிரி ஆறு நடுவில் அமைந்துள்ள ஆதி விஸ்வேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

  பள்ளிபாளையம் ஜனவரி 18 நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்தி பாளையம் கிராமத்தில், 😚காவிரி ஆற்றின் நடுவில் ஸ்ரீ அருள்தரும் விசாலாட்சி அம்மை உடனமர் ,அருள்தரும் ஆதி விஸ்வேஸ்வரர் எனும் நட்டாற்றீஸ்வரர் கோவில் பாறைகளின் நடுவே அமைந்துள்ளது . சுமார் 300 ஆண்டு காலம் பழமையான கோவிலாக கருதப்படும் இந்த கோவிலுக்கு , ஆவத்தி பாளையம் காவிரி கரை ஓரத்தில் இருந்து நடு ஆற்றில் உள்ள இந்த கோவிலுக்கு பரிசல் மூலமாக மட்டுமே செல்ல முடியும். இந்தக் கோவிலில் இன்று 108 சங்காபிஷேக விழாவுடன், கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது .

சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பரிசல் மூலமாக கோவிலுக்கு வந்தடைந்தனர். கோவில் கலசங்களுக்கு சிறப்பு விசேஷ பூஜைகள்,கோவிலில் உப தெய்வங்களாக உள்ள சிவகாமி அம்மை உடனமர் ,ஆனந்த நடராஜர் சப்த கன்னிமார்கள், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்வுகள் நடைபெற்று, கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி, கைலாய வாத்தியங்கள் முழங்க திருவீதி உலா நிகழ்வுகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News