பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2024-05-24 16:12 GMT

கும்பாபிஷேகம் 

ராணிப்பேட்டை மாவட்டம் ,நெமிலியை அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக காலையில் தேவதா அனுக்ஞை, கோ பூஜை, தனபூஜை, கணபதி ஹோமம், யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாரதனை, நாடி சந்தானம் ஆகியவை நடைபெற்றது.

பின்னர் பூஜை செய்யப்பட்ட கலச நீரை வேத மந்திரங்கள் ஓதியவாறு எடுத்து சென்று, கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதில் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, சேந்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சிவ.மணிவண்ணன் மற்றும் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News