ராசிபுரம் அருகே ஸ்ரீ வேட்டைக்காரன் சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா

ராசிபுரம் அருகே ஸ்ரீ வேட்டைக்காரன் சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-05-13 12:36 GMT

கும்பாபிஷேக விழா 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வேட்டைக்காரன் சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக நேற்று விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி, ஹோமம், காப்பு கட்டுதல், காவேரி தீர்த்தம் எடுத்துச் செல்லுதல் போன்ற நிகழ்வு நடைபெற்று.

தொடர்ந்து சிலைகள் கண் திறப்பு, மூல மந்திர ஹோமம், இரண்டாம் கால யாக பூஜை, மஹா பூர்ணாஹீதி தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கன்னிமார்சாமி, ஸ்ரீ வேட்டைக்காரன் சுவாமி, ஸ்ரீ பெரியக்காண்டி அம்மன், பாம்பாட்டி சித்தர், பெருமாள், கருப்பனார் போன்ற பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதி மற்றும் பல்வேறு மாவட்டங்களில்,

இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவில் சுவாமியை வழிபட்டு சென்றனர். இந்த கும்பாபிஷேகத்தை சிவஸ்ரீ ஆர் ஸ்ரீதர சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News