கும்பகோணத்தில் நெகிழி பொருள்கள் விற்ற கடைக்கு ‘சீல்’

கும்பகோணத்தில் நெகிழி பொருள்கள் விற்ற கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2024-05-21 04:56 GMT

கும்பகோணத்தில் நெகிழி பொருள்கள் விற்ற கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.


கும்பகோணத்தில் நெகிழி பொருள்கள் விற்ற கடைக்கு ‘சீல்’ கும்பகோணத்தில் திங்கள்கிழமை நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு சுகாதாரத் துறை அலுவலா்கள் சீல் வைத்தனா். மேலும், அந்த கடை உரிமையாளருக்கு ரூ. ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா். கும்பகோணம் மாநகராட்சியில் நெகிழி பொருள்களை விற்பனை செய்வது தொடா்பாக ஆணையா் கே.லட்சுமணன் அறிவுறுத்தலின் பேரில் சுகாதாரத் துறை அலுவலா்கள் கும்பேஸ்வரன் வடக்கு வீதி, கீழ வீதி, பெரிய கடை வீதி ஆகிய இடங்களில் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது, ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட பல வகையான நெகிழி பொருள்கள் மொத்தமாக விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அலுவலா்கள் அவற்றை பறிமுதல் செய்து, உரிமையாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும் அந்தக் கடையை பூட்டி சீல் வைத்தனா்.

Tags:    

Similar News