குளத்தில் தொழிலாளி குளத்தில் மூழ்கி பலி

தென்காசி மாவட்டம், சுரண்டையில் குளத்தில் மூழ்கி பலியான தொழிலாளியின் உடலை மீட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-26 02:56 GMT
சுரண்டை அருகே குளத்தில் தொழிலாளி குளத்தில் மூழ்கி பலி

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே சுரண்டை அருகே இரட்டை குளத்தில் நேற்று ஆண் உடல் மிதப்பதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் சொரிமுத்து  தலைமையில் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில் இறந்தவர் அழகாபுரி பட்டணத்தை சேர்ந்த சண்முகவேல் (53)கூலித் தொழிலாளி என்றவர் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News