சிவகிரி அருகே கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலி - போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்தவரை கைது செய்தனர்.

Update: 2024-02-29 01:59 GMT
சிவகிரி அருகே கார் மோதி தொழிலாளி பலி
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தரணி நகர் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (48). இவர் ஆத்துவழி விலக்கு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதி பள்ளத்தில் பாய்ந்தது கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடலை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்தவர் கேரளா சஜிதா பானு என்பவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News