வாசுதேவநல்லூர் அருகே கார் மோதி தொழிலாளி பலி

தென்காசி மாவட்டத்தில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் மீது கார் மோதி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-02-26 09:50 GMT
வாசுதேவநல்லூர் அருகே கார் மோதி தொழிலாளி பலி

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகேயுள்ள தரணி நகரைச் சேர்ந்தவர் அருணாசலம் மகன் ஈஸ்வரன் (வயது 48). தொழிலாளியான இவர் இன்று காலை ஆத்துவழி விலக்கு பஸ்ஸ்டாப் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த கார் திடீரென ஈஸ்வரன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஈஸ்வரன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஈஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து ஆய்வாளர் சண்முக சுந்தரம் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த கேரள மாநிலம் புனலூர் சாலகோடு பகுதியைச் சேர்ந்த அசரப் மனைவி சகிதபானு (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News