உப்பிடமங்கலத்தில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க கூட்டம்

உப்பிடமங்கலத்தில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க கூட்டம் எம் எல் ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-01-26 11:35 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

உப்பிடமங்கலத்தில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில், மொழிபோர் தியாகிகளுக்கு வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம், உப்பிடமங்கலம், தெற்குகேட், அண்ணாதிடலில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன், மாவட்ட கழக துணை செயலாளர் பூவை ரமேஷ் பாபு, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிராஜா, தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கரன், கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம்,கடவுர் ஒன்றிய குழு தலைவர் செல்வராஜ்,

மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் நந்தினி தமிழ்செல்வன், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், கட்சியின் தலைமைக்கழக பேச்சாளர்கள் அர.திராவிடம் மற்றும் அம்பத்தூர் முருகன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

மேலும், மொழிப்போர் காப்பதற்காக பாடுபட்ட தலைவர்கள், தியாகிகளை நினைவு கூர்ந்து அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினர்.

Tags:    

Similar News