ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2024-06-24 11:59 GMT

 விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காவல் நிலையம் எதிரே உள்ள வழக்கறிஞர் மகேஸ்வரன் ரேவதி அலுவலகத்தில் வழக்கறிஞர் மீதுதாக்குதல் நடத்தப்பட்டது கடந்த மாதம் காமராஜ், ராமசாமி ஆகிய இரு வழக்கறிஞர்கள் தாக்க பட்டதை கண்டித்தும் தமிழக முழுவதும் தொடர்ச்சியாக வழக்கறிஞர் தாக்கப்படுவதை கண்டிக்கும் வகையிலும் ராஜஸ்தான் மாநிலத்தில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு நடைமுறையில் கொண்டு வரப்பட்டது.

அதுபோன்று தமிழகத்திலும் அதே போல் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றங்களின் வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்ற முகப்பில் கூடிய 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News