எலுமிச்சை விலை உயர்வு

தென்காசி மாவட்டத்தில் எலுமிச்சை விலை உயர்ந்து காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2024-05-06 07:38 GMT
தென்காசி மாவட்டத்தில் கிடுகிடுவென உயர்ந்த எலுமிச்சை பழம் விலை

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் துவங்கியுள்ளது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க மக்கள் இயற்கை குளிர்பானங்களை பருகி வருகின்றனர். இதனால் புளியங்குடி எலுமிச்சம்பழம் மார்க்கெட்டில் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.140 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது, இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News